மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாள் விழா !
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாள் விழா !
மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை !
மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு டிசம்பர் – 2 பிறந்த நாள் அன்று வெளியூரில் இருப்பதால், டிசம்பர்-3 அன்று செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக தொண்டர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற உள்ளார்.
இந்த நிகழ்வில் மாநில – மாவட்ட – மாநகர, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர் – நிர்வாகிகள்,
அனைத்து அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.