அம்மையநாயக்கனூர் அருகே போக்குவரத்து அதிகாரிகள் மீது மோத வந்த பஸ் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம்.
அம்மையநாயக்கனூர் அருகே போக்குவரத்து அதிகாரிகள் மீது மோத வந்த பஸ் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம்.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழக பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அம்மையநாயக்கனுார் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டபோது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ் அம்மையநாயக்கனுாருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல் வர முயன்றது. போக்குவரத்து அதிகாரிகள் அந்த பஸ்சை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர்.
அப்போது டிரைவர் அதிகாரிகள் மீது மோதுவது போல் பஸ்சை இயக்கி திண்டுக்கல் நோக்கி சென்றார். 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு பஸ்சை விரட்டி சென்ற போக்குவரத்து அதிகாரிகள் நடுரோட்டில் மடக்கினர். பஸ்சை பறிமுதல் செய்த அவர்கள் அம்மைநாயக்கனுார் போலீசில் ஒப்படைத்தனர். பஸ் உரிமையாளருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.