நான் வெற்றி பெற்று திருச்சி .புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்வேன். துரை.வைகோ பேட்டி.

நான் வெற்றி பெற்று திருச்சி .புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்வேன்.

துரை.வைகோ பேட்டி.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி இண்டியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர்ரொகையா ,மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்