விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு. திமுக வேட்பாளர் அக்னியூர் சிவா வாக்களித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு. திமுக வேட்பாளர் அக்னியூர் சிவா வாக்களித்தார்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 29 பேர் போட்டி விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்கு பதிவு நாளான இன்று பொதுமக்கள் காலையில் இருந்தே வாக்களித்து வருகிறார்கள். திமுக வேட்பாளரான அக்னியூர் சிவா வாக்களித்து விட்டு
தொகுதி மக்கள் அனைவரும் ‘ஜனநாயக கடமையாற்றுங்கள்’… என்று வேண்டுகோள் வைத்தார்.